ஏனையவை
முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடிக்க கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
எஸ் கே 21 படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 22 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
ஆனால், இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் சென்சேஷன் நடிகை குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் சென்சேஷன் நடிகையாக மாறியுள்ள மிருனாள் தாகூர் தான் எஸ் கே 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
எஸ் கே 21 மற்றும் 22 என தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களின் அப்டேட் வெளியாகி கொண்டிருக்க எஸ் கே 14 என துவங்கப்பட்ட அயலான் இந்த ஆண்டிற்குள் வெளியாகவுள்ளது. விரைவில் அயலான் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினி.. அயலான் படம் பார்த்துவிட்டு என்ன கூறினார் தெரியுமா? - tamiln