23 646493df4996b
இலங்கைஏனையவைசெய்திகள்

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

Share

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத போதகர் ஜெரோமின் வியாபார நிறுவனங்கள், மத நிலையங்கள், மற்றும் அவருடைய மனைவியின் கணக்கு என்பனவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பன்னிரண்டு வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 1226 கோடி ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதபோதகர் ஜெரோம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் குற்ற விசாரணை பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

இதேவேளை, மத போதகர் ஜெரோமிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிரக்கல்ல் டோம் நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராக்களுக்கு பொறுப்பான தகவல் தொழில்நுட்ப அதிகாரியை நாளை குற்ற விசாரணை பிரிவில் முன்னிலை ஆகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின காமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 9 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் சலுகைகள்: 3-6 மாத கால தள்ளுபடி; மத்திய வங்கியின் ஆலோசனை!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புகளின் அடிப்படையில் 3 முதல் 6 மாதங்களுக்குத்...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...