23 646493df4996b
இலங்கைஏனையவைசெய்திகள்

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

Share

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத போதகர் ஜெரோமின் வியாபார நிறுவனங்கள், மத நிலையங்கள், மற்றும் அவருடைய மனைவியின் கணக்கு என்பனவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பன்னிரண்டு வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 1226 கோடி ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதபோதகர் ஜெரோம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் குற்ற விசாரணை பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

இதேவேளை, மத போதகர் ஜெரோமிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிரக்கல்ல் டோம் நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராக்களுக்கு பொறுப்பான தகவல் தொழில்நுட்ப அதிகாரியை நாளை குற்ற விசாரணை பிரிவில் முன்னிலை ஆகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின காமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...