5 40
ஏனையவை

வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்

Share

வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 196 உறுப்பினர்களில் 146 பேர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, 29 தேசிய பட்டியல் ஆசனங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

150 க்கும் மேற்பட்ட முதல் முறை எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்றம் தயாராகி வரும் நிலையில், தேசிய பட்டியல் உறுப்பினர்களிலும் புதியவர்கள் இருக்கலமென எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.

தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெற்ற 141 பேரில் 130 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பெற்றுக்கொண்ட 35 நாடாளுமன்ற இடங்களில் எட்டு புதிய எம்.பி.க்கள் தெரிவாகியுள்ளனர்.

27 பேர் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சார்பாக ஒரே ஒரு புதிய எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, இலங்கைத் தமிழரசு கட்சி ஆறு இடங்களைப் பெற்றது, அதில் மூன்று புதிய எம்பிக்கள் வெற்றி பெற்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் (SLMC) புதிய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய ஜனநாயக முன்னணி (NDF) இந்த ஆண்டு தேர்தலில் மூன்று எம்பி ஆசனங்களைப் பெற்றது, அவர்கள் அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

 

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...