5 40
ஏனையவை

வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்

Share

வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 196 உறுப்பினர்களில் 146 பேர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, 29 தேசிய பட்டியல் ஆசனங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

150 க்கும் மேற்பட்ட முதல் முறை எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்றம் தயாராகி வரும் நிலையில், தேசிய பட்டியல் உறுப்பினர்களிலும் புதியவர்கள் இருக்கலமென எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.

தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெற்ற 141 பேரில் 130 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பெற்றுக்கொண்ட 35 நாடாளுமன்ற இடங்களில் எட்டு புதிய எம்.பி.க்கள் தெரிவாகியுள்ளனர்.

27 பேர் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சார்பாக ஒரே ஒரு புதிய எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, இலங்கைத் தமிழரசு கட்சி ஆறு இடங்களைப் பெற்றது, அதில் மூன்று புதிய எம்பிக்கள் வெற்றி பெற்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் (SLMC) புதிய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய ஜனநாயக முன்னணி (NDF) இந்த ஆண்டு தேர்தலில் மூன்று எம்பி ஆசனங்களைப் பெற்றது, அவர்கள் அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

 

Share
தொடர்புடையது
19 4
ஏனையவை

சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

சிறைச்சாலைத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் அவர்கள் பணியாற்றி இடங்களில் இருந்து அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...