ஏனையவை

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

Share

TELO Leader Selvam Adaikkalanathan Walks Out of Vavuniya Press Conference Amidst Controversy Over Leaked Voice Recording.

Selvam Adaikkalanathan, TELO Party, Press Conference Boycott, Vavuniya,
ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை இன்று (நவம்பர் 11) புறக்கணித்து உடனடியாக வெளியேறிச் சென்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாகச் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் ரெலோ கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (நவம்பர் 9) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்தது.

இதனையடுத்துக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தலைமையில் ஊடகச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

ஊடகச் சந்திப்புக்கு முன்னதாகவே அங்குப் பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள், செல்வம் அடைக்கலநாதனைச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு பலமுறை கேட்டும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

ஊடகச் சந்திப்பில் தனக்கு அருகாமையில் அமரக் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சிலரை ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அழைத்தபோதும், வேறு எவரும் அதில் கலந்துகொள்ளாது வெளியேறிச் சென்றிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஊடகச் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராகத் திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என ஊடகப் பேச்சாளர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...