15 28
ஏனையவை

யாழ்.மத்திய பேருந்து நிலைய வியாபாரிகள் விடுத்துள்ள கோரிக்கை

Share

யாழ்.மத்திய பேருந்து நிலைய வியாபாரிகள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மை அகற்ற வேண்டாம் என பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் நேற்றையதினம் (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வியாபாரிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பேருந்து நிலைய வளாகத்தில் எமது வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து நாம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர்.

இதேவேளை எம்மை நம்பியே எமது குடும்பம் இருக்கின்றது.15 வருடமாக இதனை நம்பியே நாம் வாழ்கின்றோம்.இலங்கை போக்குவரத்து சபை எங்களுக்கு தமது வளாகத்தில் செயற்பட அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். எங்களுடைய பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.

இலங்கை போக்குவரத்து சபை சேவையினையும் இந்த இடத்தினை விட்டு அகற்ற கூடாது. அந்த சேவை இந்த பகுதியில் முன்னெடுப்பதன் மூலமே எமக்கு வருமானம் கிடைக்கிறது.

தற்பொழுது மாநகர சபை இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை முகாமையாளரூடாக 14 நாட்களுக்குள் எம்மை வெளியேறுமாறு கடிதம் வழங்கியுள்ளனர்.

கோவிட் தொற்றினால் நாம் பாதிக்கப்பட்டோம். பாதிக்கப்பட்ட நாம் இப்பொழுது தான் மீண்டு வருகின்றோம். ஆகவே இதனை ஆளுநர் கருத்திற்கொண்டு தனது தீர்மானத்தை எமக்காக கரிசனை கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...