ஏனையவை

ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு Upcoming Elections Germany Paint On Politicians

Share

ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு
Upcoming Elections Germany Paint On Politicians

Upcoming Elections Germany Paint On Politicians,
Germany,
World

ஜேர்மன் மாகாணமொன்றில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் மீது நிறப்பூச்சு ( Paint)வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில், kingmaker கட்சி என அறியப்படும் Sahra Wagenknecht Alliance (BSW) கட்சியின் தலைவர்களில் ஒருவரான Sahra Wagenknecht மீது நிறப்பூச்சு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திடீரென தன் மீது நிறப்பூச்சு வீசப்பட்டதால் அவர் சற்று அதிர்ச்சியடைந்தாலும், மீண்டும் தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றியுள்ளார்.

இதனையடுத்து நிறப்பூச்சு வீசிய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

BSW கட்சி, தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அக்கட்சி kingmaker கட்சி என அழைக்கப்படுகிறது.

உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என Sahra தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

மேலும், எதனால் Sahra மீது நிறப்பூச்சு வீசப்பட்டது என்பது மர்மமாகவே நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...