ஏனையவை

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Share

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Sri Lankan Airlines Brought Under Govt Control

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை விவரிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை வழங்கினார்.

அனைத்து இலங்கையர்களும் பெருமைகொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும் அது இலங்கையர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தியதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தவிசாளர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நஷ்டத்தைக் குவித்து வரும் விமான நிறுவனத்தை ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்னாள் ஆட்சியின் திட்டங்களை அரசாங்கம் தற்போது துக்கியெறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...