உலகம்ஏனையவைசெய்திகள்

காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துங்கள்… இல்லையென்றால்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

Share

காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துங்கள்… இல்லையென்றால்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் ஒரு மாபெரும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளவேண்டிவரும் என ஈரான் எச்சரித்துள்ளது.

காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சரான Hossein Amirabdollahian, ஹிஸ்புல்லா அமைப்பு போரில் இணைந்தால், போர் மத்திய கிழக்கு நாடுகளின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்று எச்சரித்துள்ளார்.

ஹிஸ்புல்லா என்பது, ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் செயல்படும் போராளிக்குழு ஆகும். இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தான், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான Sayyed Hassan Nasrallahவை சந்தித்ததாக தெரிவித்துள்ள Hossein, காசாவில் வாழும் பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் ஹிஸ்புல்லா அமைப்பு எடுக்கும் நடவடிக்கையால் இஸ்ரேலில் ஒரு பெரிய நிலநடுக்கமே உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...