24 6676d1cfd13c0 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு

Share

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு\

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற ஸார்ப் நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் முப்பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (sarp)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பு மேற்கு கிழக்கு மண்ணாகண்டல் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் முப்;பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (301668) இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு (66238) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு ஒழுமடு மாங்குளம் கொக்காவில் மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...