பொதுவாக பருவநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
சளி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நீங்களே இயற்கை முறையில் மருந்து தயாரித்து சாப்பிடலாம்.
அந்தவகையில் தற்போது சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கு தீர்வு தரும் சூப்பர் மருந்து ஒன்றை இங்கே பார்ப்போம்.
- திரிகடுக சூரணத்தை இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
- நன்கு கொதித்து மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும்.
- அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும்.
- திரிகடுக தேநீர் ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி, உடல் நிலை சரியாகிவிடும்.
#coughs #colds