Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவுடன் கைசாத்திடப்படவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Share

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ முன்வைக்கப்படவில்லை.

இது நாட்டின் எரிசக்தி துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.

இவ் ஒப்பந்தம் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இவ் ஒப்பந்தம் NFC Sri Lanka Power Holdings  என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் தான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 7
இலங்கைசெய்திகள்

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி: விலையில் ஏற்படும் மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது....

26 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள பலுசிஸ்தான்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட...

25 7
இலங்கைசெய்திகள்

நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்...

24 8
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக...