சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாரவில்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவாபம் கொழும்பு புகையிரத பாதையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாதம்ப பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாரவில பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment