1721635918 Jeevan Thondaman DailyCeylon 1
செய்திகள்அரசியல்இலங்கை

சௌமியமூர்த்தி தொண்டமானால் தான் நீங்கள் சபையில் பேசுகிறீர்கள்!– நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்!

Share

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் அவரது பெயரிலான ஞாபகார்த்த மண்டபத்தையும் விமர்சித்த அரசாங்கத்தின் மலையகப் பிரதிநிதிகளுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் இன்று (23) நாடாளுமன்றத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் சாடினார். “சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபம் 2005-ல் உருவாக்கப்பட்டது. அப்போது தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சரவையில் இருந்தார். உண்மையை மறைத்துப் பேச வேண்டாம். தொண்டமான் பெற்றுக்கொடுத்த பிரஜாவுரிமையால் தான் இன்று நீங்கள் சபைக்கு வந்து வாய்கிழியப் பேசுகிறீர்கள்” என அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்களின் பெயரிலான மண்டபங்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தலைவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஞாபகார்த்த மன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

“முன்னாள் தலைவர்களை ‘சாபம்’ என்று பேசுவது வீரமல்ல; அது அரசியல் சுயநலம் மற்றும் தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம். நாட்டுக்குச் சேவையாற்றியவர்களின் பெயர்கள் தான் மன்றங்களுக்குச் சூட்டப்படுமே தவிர, நாட்டை அழித்தவர்களின் பெயர்கள் அல்ல” என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு ‘வால் பிடித்து’ வெற்றி பெற்று சபைக்கு வருவது புத்திசாலித்தனம் அல்ல எனவும், முதலில் அரசாங்கம் என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுமாறும் அவர் அரசாங்கத் தரப்பு மலையக உறுப்பினர்களைச் சாடினார்.

மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தாமல், வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதைத் தவிர்க்குமாறு அவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...