உலகம்செய்திகள்

மனிதர்களுக்கு பரவும் மான் ஜாம்பி நோய் – எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!

Share

வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள வனவிலங்குகளிடையே பரவும் நாள்பட்ட வேஸ்டிங் நோய் குறித்து மனிதர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நோயானது கடந்த மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வயோமிங்கில் உள்ள காட்டுமான் மற்றும் மூஸின் 800 மாதிரிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறியாக இருப்பது, விலங்குகள் சோர்வாகவும், மந்தநிலையிலும் இருப்பதே ஆகும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயானது மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இதுவரை 31 மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விலங்குகளின் மலம், மண் அல்லது செடிகள் போன்ற இடங்களில் தொற்றி இருக்கும் துகள்கள் மூலமும் பரவுவதாக தெரியவந்துள்ளது.

இது மனிதர்களுக்கு ஏற்பட்டால் உடல் மெலிந்து நாள்பட்ட நோயால் அவதியுற்று இறுதியில் உயிரிழந்துவிடுவார்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயால் இன்று வரையில் எந்தவொரு மனிதரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...