உலகம்செய்திகள்

மனிதர்களுக்கு பரவும் மான் ஜாம்பி நோய் – எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!

Share

வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள வனவிலங்குகளிடையே பரவும் நாள்பட்ட வேஸ்டிங் நோய் குறித்து மனிதர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நோயானது கடந்த மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வயோமிங்கில் உள்ள காட்டுமான் மற்றும் மூஸின் 800 மாதிரிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறியாக இருப்பது, விலங்குகள் சோர்வாகவும், மந்தநிலையிலும் இருப்பதே ஆகும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயானது மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இதுவரை 31 மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விலங்குகளின் மலம், மண் அல்லது செடிகள் போன்ற இடங்களில் தொற்றி இருக்கும் துகள்கள் மூலமும் பரவுவதாக தெரியவந்துள்ளது.

இது மனிதர்களுக்கு ஏற்பட்டால் உடல் மெலிந்து நாள்பட்ட நோயால் அவதியுற்று இறுதியில் உயிரிழந்துவிடுவார்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயால் இன்று வரையில் எந்தவொரு மனிதரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...