உலகம்செய்திகள்

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம்

Share
15
Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதற்கு உங்கள் நாட்டில் வீரர்கள் இல்லை என கூறியுள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீரர்கள் இருக்கின்றார்களா என்பதனை தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவ்விடத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜெலென்ஸ்கியை நோக்கி கோபமாக பேசிய ட்ரம்ப், “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்.

அதுமாத்திரமன்றி, உங்களிடம் போதுமான துருப்புக்கள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது.

நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று. எனவே, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.

நீங்கள் தனியாக செயற்பட்டதில்லை, ஆனால் நீங்கள், முட்டாள் ஜனாதிபதியே எங்களிடம் 350 பில்லியனை பெற்றுள்ளீர்கள், அத்துடன் எங்கள் ஆயுத தளபாடங்கள் இல்லையென்றால் இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும்” என கடுமையாக உரையாடியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...