15
உலகம்செய்திகள்

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம்

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதற்கு உங்கள் நாட்டில் வீரர்கள் இல்லை என கூறியுள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீரர்கள் இருக்கின்றார்களா என்பதனை தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவ்விடத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜெலென்ஸ்கியை நோக்கி கோபமாக பேசிய ட்ரம்ப், “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்.

அதுமாத்திரமன்றி, உங்களிடம் போதுமான துருப்புக்கள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது.

நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று. எனவே, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.

நீங்கள் தனியாக செயற்பட்டதில்லை, ஆனால் நீங்கள், முட்டாள் ஜனாதிபதியே எங்களிடம் 350 பில்லியனை பெற்றுள்ளீர்கள், அத்துடன் எங்கள் ஆயுத தளபாடங்கள் இல்லையென்றால் இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும்” என கடுமையாக உரையாடியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...