2 32
உலகம்செய்திகள்

மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம்… எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி

Share

மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம்… எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையிலேயே, மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம் என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

போர் நிறுத்தம் செய்ய தாம் தயாரென புடின் கூறுவதை உலகத் தலைவர்கள் நம்ப வேண்டாம் என்று தாம் எச்சரித்து வருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் தொலைபேசியில் விவாதித்ததன் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில்,

உக்ரைன் வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன், வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன் என்றார்.

இதனிடையே, மூன்று வருட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை இரவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 90 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி பேச்சுவார்த்தைகளை அறிவித்தார்.

ஆனால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை என்று அவரது பாதுகாப்பு செயலாளர் எச்சரித்தார். இந்த நிலையில், ட்ரம்ப் ஒரே நேரத்தில் தன்னுடனும் புடினுடனும் பேசுவதே தனது அசல் திட்டமாக இருந்ததாகத் தெரிவித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆதரவைப் பராமரிப்பது என்பது தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...