3 5 scaled
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

Share

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...