24 6680f2acdea63
உலகம்செய்திகள்

உயிரை மாய்த்துக்கொள்வதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்..இறப்பிற்கு பின் தெரிய வந்த விடயம்

Share

உயிரை மாய்த்துக்கொள்வதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்..இறப்பிற்கு பின் தெரிய வந்த விடயம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் கனசாவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, சந்தோஷ் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தோஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது இறப்பு குறித்து நடந்த விசாரணையில், இளம்பெண் ஒருவரை சந்தோஷ் காதலித்துள்ளார்.

ஆனால், குறித்த பெண் காதலை ஏற்காததால் விரக்தியில் இருந்த சந்தோஷ், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உயிரை மாய்த்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

அதன் பின்னரே அவர் தூக்கில் தொங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...