23 64fd62a7aea59
உலகம்செய்திகள்

திருடன் என நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்கள்!

Share

திருடன் என நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்கள்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 24 வயது இளைஞர் கடை உரிமையாளர் திருடன் என நினைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் அனில் குமார் (24) என்ற இளைஞர், மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இரவு வேளையில் நடமாடியுள்ளார்.

அந்த கடைசியில் ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடந்திருந்தது. இதனால் அனில் குமாரை கவனித்த அப்பகுதி கடை உரிமையாளர்கள் சிலர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அனில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Tila Mor அருகே அனில் குமார் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் அனில் குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மரச்சாமான் உரிமையாளர்களான அக்லக் கான் (26), ஷுபான் கான் (24) மற்றும் நௌஷாத் (20) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிசாரின் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள் பழைய தளபாடங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...