உலகம்செய்திகள்

ஜேர்மனியில் குழந்தையுடன் ரயில் தண்டவாளத்தில் இறங்கிய இளம்பெண்: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்

Share
24 664f26ea8f90d
Share

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், குழந்தையுடன் தண்டவாளத்தில் இறங்கிய இளம்பெண் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று மாலை 6.20 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் தண்டவாளத்தில் இறங்கியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வேகமாக வந்த ரயில் அவர் மீது மோத, உடனடியாக உதவிக்கு ஹெலிகொப்டர் ஒன்று வர, அவரை சோதித்த மருத்துவ உதவிக்குழுவினர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், அந்தப் பெண் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் இறங்கியதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியில் இருக்கும் 16 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...