tamilni 15 scaled
உலகம்செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்

Share

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது.

மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது. இந்த மூன்று கப்பல்களும் கடலுக்குள் கிடப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அப்போது குறைந்த அளவு புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது விரிவான ஆய்வுடன் தெளிவான காணொளி பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியிலிருந்து முறைப்படி குறித்த ஆய்வை மூன்று முழு நாட்கள் குழுவினர் மேற்கொண்டதாக ஓஷன் எக்ஸ்ப்ளரேஷன் ட்ரஸ்ட் முதன்மை விஞ்ஞானி டேனியல் வாக்னர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் கப்பற்படை தாக்கித் தகர்த்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த மிட்வே சண்டை நடைபெற்றது.

அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இணையான தொலைவில் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே அடால் என்ற குட்டித் தீவுகளில் இருந்த அமெரிக்க ரோந்து விமான தளத்தைத் தாக்கித் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்காவின் பசிபிக் கடற்படைப் பிரிவிலுள்ள கப்பல்களை அழிக்கவும் ஜப்பானிய கடற்படை திட்டமிட்டது.

ஆனால், இதுதொடர்பான தகவல் தொடர்புகளை அமெரிக்கப் படையினர் ஒட்டுக்கேட்டு முன்னதாகவே அறிந்துகொண்டுவிட்டனர். இதைத் தொடர்ந்து, மிட்வே அடாலிலிருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு 5 நாள்கள் இந்தச் சண்டை நடைபெற்றது.

நான்கு விமானந் தாங்கிக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், 200-க்கும் அதிகமான ஜப்பானிய விமானங்களை அமெரிக்கப் படை சுட்டு வீழ்த்தியது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கத் தரப்பில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். போரில் மிக மோசமாகச் சேதமுற்ற யார்க்டவுன் விமானந்தாங்கிக் கப்பல், சுமார் 150 விமானங்களுடன் பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப்பட்டபோது ஜப்பானிய நீர்மூழ்கியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...