உலகம்செய்திகள்

500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

Share

500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

உலகில் 500 பேரிடம் மட்டும் இருக்கும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் முதன்முதலில் 1300ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் (passport) தான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பார்க்கப்படுகிறது.

அதுதான், மால்டாவின் இறையாண்மை ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட். சாவரின் மிலிட்டரி-யின் உறுப்பினர்களுக்கு என தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கென கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளனர்.

1300ம் ஆண்டு முதல் முதலாக இந்த ஆர்டர் ஆஃப் மால்டா என்ற பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட் மூலம் தூதர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

2ம் உலகப் போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியது. இந்த பாஸ்போர்ட்கள் உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள இந்த பாஸ்போர்ட், இயேசுவின் இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.

பாஸ்போர்ட்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட்டை சுமார் 100 ஆண்டுகள் பயன்படுத்த முடியும், ஏனென்றால் இதன் உறுப்பினர்கள் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதன் உறுப்பினர்கள் 85வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. மொத்தம் 44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்ட்டின் பின்பக்கத்தில் மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...