rtjy 271 scaled
உலகம்செய்திகள்

பிரம்மாண்ட கடிகாரத்தை வடிவமைக்கும் பிரபல தொழிலதிபர்

Share

பிரம்மாண்ட கடிகாரத்தை வடிவமைக்கும் பிரபல தொழிலதிபர்

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரும் முன்னனி இணையவழி வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டுவருகிறது.

இதற்கு தற்போது வரை 42 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்திற்கு க்ளாக் ஆப் தி லாங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதலில் இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்தக் கடிகாரம் என அந்நிறுவனம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...

Untitled 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோட்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்!

நுவரெலியா – கம்பொலை பிரதான வீதியில் கோட்மலை, கெராண்டி எல்லா பகுதிக்கு அருகே இன்று (ஏப்ரல்...