7 11
உலகம்செய்திகள்

ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு

Share

ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு

ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி.

ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல் பகுதியில், அதாவது, ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளதாக ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 40,000 விசாக்கள் திறன்மிகுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3,000 அதிகமாகும்.

2023ஆம் ஆண்டில் 570,000 பணியிடங்கள் ஜேர்மனியில் காலியாக இருந்ததாக, ஜேர்மன் பொருளாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது.

இன்னும், போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து பாதித்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகுதியுடையோர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...