7 11
உலகம்செய்திகள்

ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு

Share

ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு

ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி.

ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல் பகுதியில், அதாவது, ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளதாக ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 40,000 விசாக்கள் திறன்மிகுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3,000 அதிகமாகும்.

2023ஆம் ஆண்டில் 570,000 பணியிடங்கள் ஜேர்மனியில் காலியாக இருந்ததாக, ஜேர்மன் பொருளாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது.

இன்னும், போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து பாதித்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகுதியுடையோர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...