tamilnaadi 144 scaled
உலகம்செய்திகள்

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்

Share

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், என்ன வேலைக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியாது.

உங்களுக்கு சம்பளம் தான் முக்கியம். மற்றவை எல்லாம் அதற்கு பிறகுதான் என்று சொல்பவராக இருந்தால், இந்த வேலையைப் பற்றி தெரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.

சம்பளம் என்பது வேலையும் அதன் தன்மையையும் பொறுத்தது. சில துறைகளில், ஊழியர் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகளை ஆண்டுக்கு ஒரு முறை பெறுகிறார்.

சில வேலைகளில், பணியாளர் ஓய்வு பெறும் வரை பாரிய சம்பளம் இருக்காது. இதனால், நல்ல வேலை தேடுவதுதான் இப்போது அனைவரின் லட்சியமாக உள்ளது.

லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை இருந்தாலும், சிலர் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக, சில வவுச்சர்கள், பயணங்கள், இலவச வசதிகள் என்று கோடிக்கணக்கில் கிடைக்கும் வேலை தேடி அலைகிறார்கள்.

கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வேண்டுமானால் சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து தூரமாக இருக்கவேண்டும், ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டும், அப்படி இருந்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக உள்ளனர்.

ஆனால் சிலருக்கு அத்தகைய வேலை எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. Tik-Tokகில் தனது பணி குறித்து ஒரு பெண் தகவல் தெரிவித்துள்ளார். இவர் செய்யும் வேலையும், சம்பளம் கேட்ட நெட்டிசன்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அவர் பெயர் ஷம்ஸ் அல்பயாதி. வயது 27. அவர் செய்யும் வேலைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம். சம்பளம் மட்டுமின்றி அனைத்து விதமான சொகுசு வசதிகளையும் பெறுகிறார்.

ரிசார்ட்டில் இருப்பது போன்ற வசதிகள், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் செலவுகள் குறைவு.

எனவே, அவர் தனது பொழுதுபோக்கை நிறைவேற்ற பணத்தை தாராளமாக பயன்படுத்துகிறார். அதுமட்டுமின்றி, அவர் கொஞ்சம் பணத்தை சேமித்து வைக்கிறார்.

ஷம்ஸ் அல்பியாட்டி Google, Facebook, Amazon உள்ளிட்ட சில IT நிறுவனங்களில் பணிபுரிகிறார் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு.

ஷம்ஸ் ஒரு பொறியாளர் (Field Engineer). அவர் உலகின் மிகப்பாரிய எண்ணெய் சுரங்கத்தில் வேலை செய்கிறார். அதுவும், வீட்டலிருந்து வெகு தொலைவில் செய்கிறார்.

எண்ணெய் சுரங்கங்களில் சேதமடைந்த மற்றும் உடைந்த இயந்திரங்களை சரிசெய்வது ஷம்ஸ் அல்பயாட்டியின் வேலை.

இந்த வேலைக்கு ஷம்ஸ் 100,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ. 4 கோடி) சம்பளம் வாங்குகிறார்.

அங்கு அவர் நிறைய கற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மெக்சிகோ, நார்வே, மால்டா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்த ஷம்ஸ், அங்குள்ளதை விட எண்ணெய் சுரங்கத்தில் அதிக வசதிகளைப் பெறுவேன் என்று கூறுகிறார்.

எண்ணெய் சுரங்கத்தில் பணிபுரியும் ஷம்ஸ், உணவைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருக்கு ஒரு நல்ல சமையல்காரரால் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. மருத்துவ வசதியும் உண்டு.

எண்ணெய் சுரங்கத் துறை மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஷம்ஸ் இதை மறுக்கிறார்.

ஷம்ஸின் இதில் எந்த ஆபத்தும் இல்லை என்கிறார். பேரழிவு கணிக்கப்படும் போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவோம் என்கிறார்

மேலும், Gaming Zone, Music Room, Spa உள்ளிட்ட பல வசதிகள் இங்கு இருப்பதாக ஷம்ஸ் கூறுகிறார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...