உலகம்செய்திகள்

60 ஆண்டுகளாக உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்: மின் தடையால் உயிரிழந்த சோகக் கதை

Share

60 ஆண்டுகளாக உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்: மின் தடையால் உயிரிழந்த சோகக் கதை

மூன்று வயதில் போலியோ என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், சுமார் 60 ஆண்டுகளாக இயந்திரம் ஒன்றின் உதவியுடன் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மின் தடை அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் Tennesseeயில் பிறந்த டயான் (Dianne Odell) என்னும் பெண்ணுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவரை போலியோ என்னும் கொடிய நோய் தாக்கியுள்ளது.

உலோக நுரையீரல் என்று அழைக்கப்படும் ஒரு இயந்திரத்தின் உதவியுடனேயேதான் அவர் வாழ்ந்துவந்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் 60 ஆண்டுகள் வாழ்ந்தும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த டயான், தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பாராம். தனது இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் உதவியுடன் விருந்தினர்களுடன் உரையாடுவது, காற்று ஊதுவதன் மூலம் தொலைக்காட்சியை இயக்கும் ஒரு குழாயின் உதவியுடன் தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு, ஒலி எழுப்பும் ஒரு கணினி உதவியுடன் பேசிக்கொண்டு என மகிழ்ச்சியாகவே இருப்பாராம் டயான்.

ஆனால், 2008ஆம் ஆண்டு, மே மாதம், டயானுக்கு 61 வயது இருக்கும்போது, ஒருமுறை மின் தடை ஏற்பட, அவரது நுரையீரலுக்குள் காற்றை செலுத்த பயன்படுத்தும் இயந்திரம் செயல்படாமல் போயிருக்கிறது.

அவரது குடும்பத்தினர் எவ்வளவு முயற்சித்தும், அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்களையும் கை பம்புகளை பயன்படுத்தி முயற்சி செய்தும் அவரது சுவாசத்தை அவர்களால் சரி செய்ய இயலாமல் போயுள்ளது.

Share
தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...