15 8
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கலவரம் வெடிக்க காரணமான பிரதான பெண் சூத்திரதாரி கைது

Share

பிரித்தானியாவில் கலவரம் வெடிக்க காரணமான பிரதான பெண் சூத்திரதாரி கைது

பிரித்தானியாவில் சவுத்போர்ட் (Southport) தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பதிவில் தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், சிறுபடகு மூலமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும், MI6 கண்காணிப்பு பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செஸ்டர் (Chester) பகுதி அருகாமையில் வைத்து அவர் கைதாகியுள்ளதோடு, தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரித்தானியாவின் முக்கியமான பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் காரணமாகவே பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரத்தில் கைதான பெண் ஒரு கோடீஸ்வரர் என்றும், பெர்னாடெட் ஸ்போஃபோர்ட் (Bernadette Spofforth) என்பது அவரது பெயர் எனவும் தகவல் கசிந்துள்ளது.

தாக்குதல் தாரியின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடும் முன்னர், சந்தேக நபரின் பெயர் Ali Al-Shakati என அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இவை அனைத்தும் உண்மை என்றால் பிரித்தானியா பற்றியெரிவது உறுதி என்றும் அந்த பெண் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் , சுமார் 38 நிமிடங்கள் முன்னர் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இருந்து ஒருவர் பதிவிட்ட தகவல்களை மட்டுமே தாம் நகலெடுத்து பதிவிட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் இதே தகவலை அப்போது பதிவிட்டிருந்தாலும், அவை உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், இவர் பகிர்ந்த தகவலானது ரஷ்ய சமூக ஊடக பயனர்களால் தீயாக இணையத்தில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான Tommy Robinson மற்றும் Andrew Tate ஆகியோரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...