R 14
உலகம்செய்திகள்

கனடா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட இந்தியப் பெண்: பொலிசார் அதிரடி

Share

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார்.

டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துள்ளார் ஜாஸ்மின். ஆகவே, தங்களை அவர் ஏமாற்றிவிட்டதாக ஜக்ரூப் குடும்பத்தினர் பொலிசில் புகாரளிக்க, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஜாஸ்மின் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர் இந்தியா வந்ததும் கைது செய்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் படிப்பிற்காக 28 லட்ச ரூபாய் செலவு செய்ததாக ஜக்ரூப் குடும்பத்தினர் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், தனது சகோதரியின் திருமணத்துக்காக கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார் ஜாஸ்மின். 9ஆம் திகதி டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஜாஸ்மின், காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது, தனது படிப்புக்காக தனது கணவர் குடும்பம் தனக்கு 14 லட்ச ரூபாய் அனுப்பியதாக கூறியுள்ளார் அவர்.

இனி பெண்கள் இப்படி மோசடியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தான் புகாரளித்ததாக அம்ரிக் சிங் கூறியிருந்த நிலையில், தற்போது ஜாஸ்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தனக்கு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...