tamilni 185 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோயால் மரணமடைந்த மனைவி: பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் எடுத்த முடிவு

Share

பிரித்தானியப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைய, மனைவியின் பிரிவைத் தாங்க இயலாமல் தவித்த கணவர் மோசமான முடிவொன்றை எடுத்தார்.

இங்கிலாந்தின் Norwich என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆடம் (Adam Thompson, 39). ஆடமின் மனைவி லூசி (Lucy, 44). மனைவி மீது அப்படியொரு பிரியம் ஆடமுக்கு.

2009ஆம் ஆண்டு லூசி நிறுவிய நிறுவனமொன்றில் 2016ஆம் ஆண்டு இணை இயக்குநராக இணைந்தார் ஆடம். இருவருக்கும் காதல் ஏற்படவே, 2019ஆம் ஆண்டு Norwich தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

உண்மையில், அதற்கு முன்பே லூசிக்கு புற்றுநோய் தாக்கியிருந்தது. சிகிச்சைக்குப் பின், பிரச்சினை ஒன்றும் இருக்காது, திருமணம் செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் ஒப்புதலளித்தபிறகுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆனால், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், லூசியின் கல்லீரலில் மீண்டும் புற்றுநோய் உருவானதுடன், பல புற்றுநோய்க் கட்டிகள் உருவாகியதும் தெரியவந்தது.

தன் காதல் மனைவிக்கு புற்றுநோய் என தெரியவந்ததும், மனைவியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் ஆடம்.

ஆடம் ஐந்து ஆண்டுகளாக மனைவியைக் கவனித்துவந்தும், லூசி உயிரிழந்துவிட்டார். மனைவியின் இழப்பைத் தாங்கமுடியாமல் தவியாய்த் தவித்துவந்தார் ஆடம்.

இந்நிலையில், ஒருநாள் ஆடம் அலுவலகத்துக்கு வரவில்லை என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. உடனே அவரது வீட்டுக்குச் சென்ற அவர்கள், ஆடம் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடற்கூறு ஆய்வில், லூசியின் புற்றுநோய் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு ஆடம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

மனைவி இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வோர் பலர் வாழும் உலகில், மனைவி மரணமடைந்ததால், அவள் இல்லாமல் எப்படி வாழ்வது என்று எண்ணி மரணத்தைத் தழுவிக்கொண்ட ஆடம் எடுத்த முடிவு மோசமானதுதான் என்றாலும், அவர் மனைவி மீது வைத்த அன்பை நிச்சயம் குறை சொல்ல முடியாது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...