tamilnaadih 11 scaled
உலகம்செய்திகள்

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

Share

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

ரோமின் வாடிகன் நகரில் கிட்டத்தட்ட 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்பது தெரியுமா!

ரோமின்(Rome) வாடிகன் நகரம்(Vatican city), உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இது 44 ஹெக்டேர் பரப்பளவில், 800க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

1929ம் ஆண்டு லேட்டரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து, இது சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், கடந்த 95 வருடங்களாக, அதாவது 1929ம் ஆண்டு முதல், வாடிகன் நகரில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை(No Child Births).

வாடிகன் நகர குடியுரிமை பெறுவதற்கு, ஒருவர் கத்தோலிக்க திருச்சபையில் பணிபுரியும் பாதிரியார் அல்லது துறவியாக இருக்க வேண்டும். இவ்வாறு குடியுரிமை பெறுபவர்களும் அவர்களது பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு வாழ முடியும்.

வாடிகன் நகரில் மருத்துவமனை அல்லது பிரசவ மையம் இல்லை. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு அருகிலுள்ள ரோமின் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.

வாடிகன் நகரில் மருத்துவமனை இல்லாததற்கு அதன் சிறிய அளவு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தரமான மருத்துவ வசதிகள் இருப்பதே காரணமாக கூறப்படுகிறது. வாடிகன் நகரம் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை.

இங்கு பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் இல்லை. வாடிகன் நகரம் கருத்தடை மற்றும் கருக்கலைப்புக்கு கடுமையான தடைகளை விதித்துள்ளது.

இது குழந்தை பிறப்பு விகிதத்தை மேலும் குறைக்கிறது. வாடிகன் நகரில் குழந்தை பிறப்பு இல்லாதது ஒரு தனித்துவமான சூழ்நிலை.

இது மத சமூகம், சிறிய நிலப்பரப்பு, கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் குடியுரிமை விதிமுறைகள் போன்ற பல காரணிகளின் கலவையாகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...