8 11
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது.

தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார்.

இவர், 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கணித்தது முதல், தொடர்ச்சியாக அவர் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துவருகிறார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

13 காரணிகளின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கணிக்கும் ஆலன் கூறியுள்ளார்.

இம்முறை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் வெற்றிபெறுவார் என கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...