உலகம்

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார்? கனேடிய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்

Share

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார்? கனேடிய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகிவிட்டார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவும் அதேபோல விலகுவாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார், மார்க் கார்னியா, கிறிஸ்டியா ஃப்ரீலேண்டா அல்லது டொமினிக் லி ப்ளாங்கா என கேள்வி எழுப்பியுள்ளன கனேடிய ஊடகங்கள்.

அமெரிக்காவில் ஜோ பைடன் விலகக் காரணமாக அமைந்தது அவரது வயது. ஆனால், ட்ரூடோவுக்கு அப்படியல்ல.

ட்ரூடோ தலைவராக இருந்தால் அடுத்த தேர்தலில் அவர் சார்ந்த லேபர் கட்சி வெற்றி பெறுவது கடினம் என அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.

ஆகவே, அவர் ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்தவரான Wayne Long என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக, லேபர் கட்சியின் கோட்டையான ரொரன்றோவின் St. Paul’s தொகுதியில் அக்கட்சி படுதோல்வி அடைந்த விடயம், மக்கள் ட்ரூடோ கட்சியை ஆதரிக்க விரும்பவில்லை என காட்டியுள்ளது.

ஆக, ட்ரூடோ பிரதமராக நீடித்தாரென்றால், அடுத்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்து கட்சியினரிடையே உருவாகியுள்ளது.

ஆக, இது வெறும் ஒரு தொகுதியின் தோல்வியா அல்லது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, நாடு முழுவதும் இந்த நிலைதான் காணப்படுகிறது என்று காட்டும் கண்ணாடியா என்பது தெரியவில்லை.

ஜோ பைடனைப்போல ஜஸ்டின் ட்ரூடோவும் விலகவேண்டி வருமா? காலம்தான் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்!

Share
தொடர்புடையது
09
செய்திகள்உலகம்

ரஷ்ய இராணுவத்தின் கொடூரம் அம்பலம்: சொந்த வீரர்களையே சுட்டுக்கொல்லும் ‘ஜீரோயிங்’ முறை – முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய இராணுவம் தனது சொந்த வீரர்களையே ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்வதாகவும், மேலதிகாரிகளின் உத்தரவுகளை மறுப்பவர்கள்...

07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

001
உலகம்செய்திகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும்! – சகோதரர் ஆண்ட்ரூ கைது குறித்து மன்னர் சார்லஸ் அதிரடி அறிக்கை!

பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தனது தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்துப்...