8 12
உலகம்செய்திகள்

டிரம்பால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி.! யார் இந்த சுசி வைல்ஸ்?

Share

டிரம்பால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி.! யார் இந்த சுசி வைல்ஸ்?

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் வெள்ளை மாளிகை தலைமைச் அதிகாரியாக சுசி வைல்ஸை (Susie Wiles) நியமித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், டிரம்ப் எடுத்த முதல் முக்கிய முடிவு சுசி வில்ஸ் நியமிக்கப்பட்டதாகும்.

சுசி வில்ஸ் ஒரு முன்நிலை அரசியல் சிந்தனையாளர் ஆவார், மேலும் அவர் டிரம்ப்பின் முடிவுகளை சிறப்பாக நிர்வகிக்கக்கூடியவர் என பலரும் கருதுகின்றனர்.

2016 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் டிரம்பின் பிரச்சாரங்களை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். இதன்மூலம் அவர் டிரம்பின் நெருங்கிய நபராகவும் மதிப்புமிக்க ஆலோசகராகவும் விளங்குகிறார்.

சுசி வில்ஸின் தந்தை புகழ்பெற்ற NFL விளம்பரத்தரகரான பட் சம்மரால் ஆவார். 1980ல் ரொனால்ட் ரீகனின் ஜனாதிபதி பிரச்சாரத்தில் பங்கேற்றதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். அதனுடன் ஃப்ளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட்டின் பிரச்சாரத்தையும் வெற்றிகரமாக கையாண்டார்.

“சூசி கடினமானவர், புத்திசாலி, புதுமையானவர், உலகளவில் போற்றப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார்” என்று டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...