24 664afbacd974c
உலகம்செய்திகள்

ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!

Share

ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அஜர்பைஜானி எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்து இருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 69 வயது துணை ஜனாதிபதி முகமது மொக்பர் ஈரான் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது.

நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருக்கிய தொடர்பு இருப்பதுடன், முகமது மொக்பர் அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 நாட்களுக்கு தேர்தல் இதற்கிடையில் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகளை 50 நாட்களுக்குள் நடத்தி முடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணிகளை முகமது மொக்பர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நாட்டின் உச்சநீதிமன்ற தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி ஆகியோர் அடங்கிய கவுன்சில் குழு மேற்கொண்டு வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...