உலகம்செய்திகள்

சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்

Share
21 8
Share

சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்

சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) விமானம் மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.

டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

விமானங்களின் தரவுகளின்படி, வடக்கு நோக்கி திரும்புவதற்கு முன்பாக அந்த விமானம் தொடக்கத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. சிறிது நேரத்தில் ஹோம்ஸ்க்கு மேலே வட்டமிடும் போது அந்த விமானத்தின் சமிக்ஞைகள் காணாமல் போயின என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் விமானம் காணாமல் போனது குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம்வரத்தொடங்கியுள்ளன.

விமானம் சென்ற பாதை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என பல ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

அதேபோல் விமானம் தீப்பிடிப்பது போன்ற, விபத்துக்குள்ளானது போன்ற உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் வலம் வரத்தொடங்கியுள்ளன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...