24 661d62580dc59
உலகம்செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்

Share

கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்

கனடாவில் அதிகளவிலான போதைப்பொருள் பாவனையால் இளம் வயதினர் உயிரிழந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமான போதை மருந்து பயன்பாட்டினால் 20 மற்றும் 30 வயதுகளை உடையவர்கள் அதிகம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தேவையான கொள்கை வகுப்புக்களில் ஆர்வம் காட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மிதமிஞ்சிய அளவிலான போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய இள வயது மரணங்களை தடுக்க மாகாண அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரட்டிஷ் கொலம்பியா, ஒன்றாரியோ, குபெக், நியூ பிரவுண்ஸ்விக் மற்றும் நோவா ஸ்கோஷியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...