tamilni 192 scaled
உலகம்செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?

Share

நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தொகுதி வாரியாக அறிவித்து வருகிறார். அந்தவகையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மரிய ஜெனிஃபர் (42) என்பவர் போட்டியிடவுள்ளார்.

இவர், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் BEComputer Science, சென்னையில் உள்ள ICFAI கல்லூரியில் MBA மார்கெட்டிங் படித்துள்ளார்.

பின்னர், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி அதிகாரியாக 17 வருடம் பணிபுரிந்துள்ளார். அதோடு ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, இவர் நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறக்கூடிய வெளிநாடு வேலைகளை விட்டு விட்டு வந்துள்ளார். இவரின் கணவர் சாலமன் தீபக். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் தான் மரிய ஜெனிஃபர் அரசியலுக்கு நுழைந்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் வலிமையுடன் இருக்கும். ஆனால், தற்போது நாம் தமிழர் கட்சியும் அங்கு வலிமையாகி வருகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...