உலகம்செய்திகள்

போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா

Share
tamilni 216 scaled
Share

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மீதான போர் நீடித்துவரும் நிலையிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான திடீர் போருக்கு பின்னர் ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கின.

ஐரோப்பாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பிடித்துவந்த ஜேர்மனி, தற்போது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் தவறிழைத்திருந்தாலும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் தலைவர்களும் இன்னொருவகையில் தவறிழைத்துள்ளதாகவே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைக்க முடியும் என்று நம்பி கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த ஜோ பைடன் மற்றும் அவரது ஆதரவு தலைவர்கள், உக்ரைனுக்கு வாரி வழங்கினர்.

உக்ரைன் மீது படையெடுக்கும் முன்னரே பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வந்ததாகவே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து குறைவான கட்டணத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ரஷ்ய மின்சாரம் மற்றும் எரிவாயு இன்றி ஜேர்மனி தற்போதும் தடுமாறி வருகிறது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து, பலர் ரஷ்யாவை நாடினர். பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் குறிப்பிட்ட மூலப் பொருட்களுக்கு ரஷ்யாவையே தற்போதும் நம்பியுள்ளது.

மேலும், உக்ரைன் போரினால் சராசரி ரஷ்ய மக்கள் நேரிடையாக பாதிக்கப்படாத வகையில் புடின் பார்த்துக்கொண்டுள்ளார். ராணுவ தளவாட உற்பத்தியால், ரஷ்யா தனது பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தூக்கி நிறுத்தியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உண்மையில் ரஷ்யாவை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம், எரிவாயு என ரஷ்யாவை நம்பியிருந்த பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...