1 8 1 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

Share

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

வாக்னர் கூலிப்படை தலைவன் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் தங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பதாக பிரான்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆலிவர் வேரன் தெரிவிக்கையில், இந்த விபத்தின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் தெரிய வரவில்லை என குறிப்பிட்ட அவர், இதில் சில நியாயமான சந்தேகங்கள் எழுவது இயல்பு என்றார்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்து குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வேரன், பொதுவான விதி என்னவென்றால், உண்மை கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில், விளாடிமிர் புடினுக்கு தெரியாமல் ஒரு நகர்வும் ரஷ்யாவில் முன்னெடுக்கப்படுவதில்லை என்றார். புடினுக்காக வாக்னர் கூலிப்படை தலைவன் கொடூரங்கள் பல நிகழ்த்தியுள்ளார்.

புடின் வகுத்த கொள்கையின்படியே எவ்ஜெனி பிரிகோஜின் செயல்பட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவராக முறைகேடுகளை முன்னெடுக்கும் பொறுப்பை புடின் அவருக்கு வழங்கியிருந்தார் எனவும் வேரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும், பிரிகோஜின் கல்லறைகளை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார். உலகின் பெரும் பகுதி முழுவதும் குழப்பங்களை மட்டுமே பிரிகோஜின் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், உக்ரைன் மட்டுமின்றி ரஷ்யாவிலும் அவரால் குழப்பம் மட்டுமே ஏற்பட்டது என ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...