1 8 1 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

Share

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

வாக்னர் கூலிப்படை தலைவன் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் தங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பதாக பிரான்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆலிவர் வேரன் தெரிவிக்கையில், இந்த விபத்தின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் தெரிய வரவில்லை என குறிப்பிட்ட அவர், இதில் சில நியாயமான சந்தேகங்கள் எழுவது இயல்பு என்றார்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்து குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வேரன், பொதுவான விதி என்னவென்றால், உண்மை கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில், விளாடிமிர் புடினுக்கு தெரியாமல் ஒரு நகர்வும் ரஷ்யாவில் முன்னெடுக்கப்படுவதில்லை என்றார். புடினுக்காக வாக்னர் கூலிப்படை தலைவன் கொடூரங்கள் பல நிகழ்த்தியுள்ளார்.

புடின் வகுத்த கொள்கையின்படியே எவ்ஜெனி பிரிகோஜின் செயல்பட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவராக முறைகேடுகளை முன்னெடுக்கும் பொறுப்பை புடின் அவருக்கு வழங்கியிருந்தார் எனவும் வேரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும், பிரிகோஜின் கல்லறைகளை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார். உலகின் பெரும் பகுதி முழுவதும் குழப்பங்களை மட்டுமே பிரிகோஜின் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், உக்ரைன் மட்டுமின்றி ரஷ்யாவிலும் அவரால் குழப்பம் மட்டுமே ஏற்பட்டது என ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...