3 10
உலகம்செய்திகள்

வத்திக்கான் புகைப்போக்கியில் இன்று இரண்டாவது நாளாகவும் கறுப்புப் புகை

Share

வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது.

இது, இரண்டாவது தடவையாகவும், 133 கர்தினால்களும் இன்னும் ஒரு பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை கத்தோலிக்க மக்களுக்கு அறிவித்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வு இன்று (8) வத்திக்கானில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் நிமித்தம், 133 கத்தோலிக்க கர்தினால்கள், இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் மண்டபத்துக்குள் சென்றுள்ளார்கள் என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டின் முதல் நாளான நேற்று புதன்கிழமை, சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியேறியது.

இது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ்க்குப் பிறகு கர்தினால்கள், ஒரு புதிய பாப்பரசரை நேற்று தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்தநிலையில் குறித்த தெரிவுத் தேர்தலினபோது, புதிய பாப்பரசராக தெரிவாகும் ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது நியதியாகும்.

பாரம்பரியத்தின் படி, நேற்று ஒரு சுற்று வாக்களிப்பு நடந்தது.

இன்று மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஒரு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் நான்கு சுற்று வாக்களிப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...