5 4 scaled
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவை சூழ்ந்த கறுப்பு புகை மூட்டம் – பலர் பலியாகியுள்ளதாக தகவல்

Share

இந்தோனேசியாவை சூழ்ந்த கறுப்பு புகை மூட்டம் – பலர் பலியாகியுள்ளதாக தகவல்

இந்தோனேசியாவின் மராபி எரிமலையின் பள்ளம் வெடித்ததில் மலையேறும் 11 பேர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் செயலில் உள்ள 127 எரிமலைகளில் ஒன்றான மராபி மலை, ஞாயிற்றுக்கிழமை 9,800 அடி உயரத்திற்கு வெடித்தது.

இதன்போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை 3 பேர் மீட்கப்பட்டனர். சிறு வெடிப்பு காரணமாக காணாமல் போன 12 பேரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மூன்று பேரும் பள்ளத்தின் அருகே காணப்பட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்ட வந்துள்ளனர்.

இதையடுத்து, அதிக வெப்பம் இருந்து காரணத்தால் சிலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் எரிமலை சாம்பலால் கார்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...