24 6601ba6199721
உலகம்செய்திகள்

புடின், ரஷ்யர்களை படுகொலை செய்வோம்! ISIS எச்சரிக்கை

Share

புடின், ரஷ்யர்களை படுகொலை செய்வோம்! ISIS எச்சரிக்கை

மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது, தங்கள் சகோதாரர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது என ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் கடுமையான காயங்களுடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் அவர்கள் ரஷ்ய ராணுவ வீரர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு, ”இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். அவர்கள் கொடுமைப்படுத்தப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர்களின் ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு இரத்த வெறியை அதிகப்படுத்துகிறது.

அனைத்து காட்டுமிராண்டி ரஷ்யர்களுக்கும்! இஸ்லாமிய கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். ஜாக்கிரத்தை! பிடிபட்ட எங்கள் சகோதரர்களுக்காக உங்களைப் பழிவாங்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று எண்ண வேண்டாம்” என அச்சுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...