24 65ff5c24c5647
உலகம்செய்திகள்

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

Share

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் உக்ரைன் நோக்கிப் பயணம் செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில் புடின் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் புடினின் கூற்றை நிராகரித்து, அவர் மீது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”நேற்று மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது: புடினும் மற்றவர்களும் வேறு யாரோ ஒருவர் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒரே முறைகளைக் கொண்டுள்ளனர்.

புடின் தனது ரஷ்ய குடிமக்களுடன் பழகுவதற்கு பதிலாக, அவர்களிடம் உரையாற்றுவதற்கு பதிலாக, ஒரு நாள் அமைதியாக இருந்தார். அதை உக்ரைனுக்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்தார். எல்லாம் முற்றிலும் கணிக்கக்கூடியது” என தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவில் ஏறக்குறைய 2 தசாப்தங்களாக நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...