உலகம்செய்திகள்

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

24 65ff5c24c5647
Share

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் உக்ரைன் நோக்கிப் பயணம் செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில் புடின் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் புடினின் கூற்றை நிராகரித்து, அவர் மீது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”நேற்று மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது: புடினும் மற்றவர்களும் வேறு யாரோ ஒருவர் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒரே முறைகளைக் கொண்டுள்ளனர்.

புடின் தனது ரஷ்ய குடிமக்களுடன் பழகுவதற்கு பதிலாக, அவர்களிடம் உரையாற்றுவதற்கு பதிலாக, ஒரு நாள் அமைதியாக இருந்தார். அதை உக்ரைனுக்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்தார். எல்லாம் முற்றிலும் கணிக்கக்கூடியது” என தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவில் ஏறக்குறைய 2 தசாப்தங்களாக நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...