tamilni 60 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி

Share

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்வைக் குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி 2022 இல் இங்கிலாந்திற்கு நிகர இடம்பெயர்வு 7,45,000 ஆக உயர்ந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில்,

குடியேற்றம் மிக அதிகமாக உள்ளது. இன்று நாம் அதைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் இங்கிலாந்துக்கு நன்மையளிப்பதோடு பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புலம்பெயர்தலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உத்தியோகப்பூர்வ x தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.

ஒரு தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கான வரம்பு £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்வடைந்துள்ளது.

குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கான வரம்பு £18,600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் “மக்கள் நிதி ரீதியாக ஆதரவளிக்கக்கூடியவர்களை மட்டுமே பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியும்.

இதேவேளை மாணவர் விசாக்களிலும் சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளை தவிர்த்து படகுகளில் பிரித்தானியாவுக்கு நுழைபவர்களின் வருகையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...