24 66494b83f142d
உலகம்செய்திகள்

சென்னையை வீழ்த்தி முன்னேறிய பெங்களூரு: கண்ணீர் சிந்திய விராட் கோஹ்லி

Share

சென்னையை வீழ்த்தி முன்னேறிய பெங்களூரு: கண்ணீர் சிந்திய விராட் கோஹ்லி

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நேற்று (18) நடைபெற்ற 17ஆவது ஐபிஎல்தொடரின் 68ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றிகொண்டது.

மேலும் விராட் கோஹ்லி, வெற்றியின் மகிழ்வில் கண்ணீர் சிந்திய விடயம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாடும் தகுதியை றோயல் செலஞ்சர்ஸ் பெற்றுக்கொண்டது.

விராட் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டம் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றின.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

இப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் தலா 14 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.

சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றி இலக்கு 219 ஓட்டங்களாக இருந்தபோதிலும் ப்ளே ஒவ் வாய்ப்பை பெறுவதற்கு அவ்வணிக்கு 201 ஓட்டங்களே தேவைப்பட்டது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...