tamilni 515 scaled
உலகம்செய்திகள்

விஜயகாந்த் தன் மரணத்தை முன்பே அறிந்திருந்தார்: பயில்வான் ரங்கநாதன்

Share

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பே தன் இறப்பை அறிந்திருந்தார் என நேர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 71வது வயதில் காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பு தன்னை பாதித்ததாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், ‘பல நடிகர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதில் கேப்டனும் ஒருவராக இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கேப்டன் தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டார்.

அது தான் நமக்கு தெரிந்த தகவல். இப்போது சூழலில் பிரேமலதாவை அவ்வாறு ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு கடினமாக இருக்கும்.

அதனால் தான் விஜயகாந்த் தன் இறுதிப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, அரசியல் பயணத்தில் தன் மனைவியை ஒரு பொறுப்பான பதவியில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்படித்தான் நாம் நினைக்க முடியும்’ என்றார்.

மேலும் அவர், ‘நடிகர் விஜய் அழுததை முதல் முறையாக பார்த்தேன். எம்ஜிஆர் மறைந்தபோது அவரது வாரிசு போல் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரது மறைவு எம்ஜிஆரின் இறப்பு எவ்வளவு பாதித்ததோ அவ்வளவு பாதித்தது.

சின்ன எம்ஜிஆரை திரையுலகம் இழந்துவிட்டது. விஜயகாந்த் தன்னுடைய கட்சியையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...