உலகம்செய்திகள்

விஜயகாந்த் தன் மரணத்தை முன்பே அறிந்திருந்தார்: பயில்வான் ரங்கநாதன்

Share
tamilni 515 scaled
Share

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பே தன் இறப்பை அறிந்திருந்தார் என நேர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 71வது வயதில் காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மட்டுமன்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்பு தன்னை பாதித்ததாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், ‘பல நடிகர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதில் கேப்டனும் ஒருவராக இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கேப்டன் தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டார்.

அது தான் நமக்கு தெரிந்த தகவல். இப்போது சூழலில் பிரேமலதாவை அவ்வாறு ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு கடினமாக இருக்கும்.

அதனால் தான் விஜயகாந்த் தன் இறுதிப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, அரசியல் பயணத்தில் தன் மனைவியை ஒரு பொறுப்பான பதவியில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்படித்தான் நாம் நினைக்க முடியும்’ என்றார்.

மேலும் அவர், ‘நடிகர் விஜய் அழுததை முதல் முறையாக பார்த்தேன். எம்ஜிஆர் மறைந்தபோது அவரது வாரிசு போல் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரது மறைவு எம்ஜிஆரின் இறப்பு எவ்வளவு பாதித்ததோ அவ்வளவு பாதித்தது.

சின்ன எம்ஜிஆரை திரையுலகம் இழந்துவிட்டது. விஜயகாந்த் தன்னுடைய கட்சியையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...