24 65b2b0b212090 md
உலகம்செய்திகள்

விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே பத்ம பூஷண் விருது கொடுத்திருக்கலாம் – பிரேமலதா

Share

விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே பத்ம பூஷண் விருது கொடுத்திருக்கலாம் – பிரேமலதா

மறைத்த விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம பூஷண் விருதினை அவர் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்திய அரசு சார்பில், கலை, அறிவியல், பண்பாடு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இது, அவரது ரசிகர்களும், தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்திற்கு பதம் பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு இந்திய அரசுக்கு நன்றி. அவர் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விருதை தமிழக மக்களுக்கும், தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இளையராஜா மகள் பவதாரிணி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இனி அவரது இனிமையான குரலை கேட்க மாட்டோம் என்பது மிகுந்த துயர் அளிக்கிறது” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...