8 3 scaled
உலகம்செய்திகள்

பிக் பாஸ் விட்டு வெளியேறிய பின் பிரதீப் போட்ட முதல் பதிவு

Share

பிக் பாஸ் விட்டு வெளியேறிய பின் பிரதீப் போட்ட முதல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிய பிரதீப் ஆண்டனி தற்போது ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். நேற்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது. பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.

இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள்.நடிகர் கவின், தொகுப்பாளினி பிரியங்கா போன்ற நட்சத்திரங்கள் இந்த முடிவு சரியில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது டுவிட்டரில் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வாங்கிய “நான் பெற்ற கோப்பைகள்” என அதனை படமெடுத்து பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...