2 28
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

Share

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றது மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான, கனடாவின் உறுதிப்பாட்டை அவர் இந்த அறிக்கையில் புதுப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

இது, உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனேடியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூருவதில், கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் திட்டத்தை கனடா ஸ்தாபித்தது என்றும் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனேடியர்களுடன் இணைந்து கொள்வதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“கனேடியர்களாக ஒன்றாக, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம்” “அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க மீண்டும் உறுதியளிப்போம்” என்றும் கனேடிய பிரதமர், கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....