2 28
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

Share

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றது மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான, கனடாவின் உறுதிப்பாட்டை அவர் இந்த அறிக்கையில் புதுப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

இது, உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனேடியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூருவதில், கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் திட்டத்தை கனடா ஸ்தாபித்தது என்றும் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனேடியர்களுடன் இணைந்து கொள்வதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“கனேடியர்களாக ஒன்றாக, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம்” “அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க மீண்டும் உறுதியளிப்போம்” என்றும் கனேடிய பிரதமர், கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...